Pages

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?


பருவ வயதில் "ஆன்ட்ரோஜன்என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண்பெண்இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.


சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளதுஅவை "சீபம்" (Sebum)என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்துதிரண்டுரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ளபருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:

முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடிகழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும்அழகு சாதன களிம்புகள்உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும்சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும்நெய்வெண்ணெய் கேக்ஐஸ்கிரீம்சாக்லெட்பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோஅதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் "டெட்ராசைக்ளின்" (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன.அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது