எல்லாம் வல்ல இறைவனின் அருளாள் அபுதாபியில்
கடந்த 29/04/2011 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அபுதாபி ஷேக்கலீபா மெடிக்கல் சிட்டி இரத்தவங்கியும் இணைந்து மெகா இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை 3 மணிமுதல் இரவு 8 மணிவரை இரத்த தானம் செய்ய மருத்துவ குழுவினர் நேரம் ஒதுக்கியிருந்தனர். அதிகமான சகோதரர்கள் வருகைத் தந்ததனைத் தொடர்ந்து இரவு 8.45 மணி வரை முகாம் நடைபெற்றது. கிடைத்த நேரத்தில் 86 சகோதரர்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.
இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர். வாகன வசதி மற்றும் இரத்த தானம் செய்ய வந்த சகோதரர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை தொண்டரணியினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் சொல்ல நினைப்பது