Pages

செவ்வாய், 3 மே, 2011

மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி


 மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ் சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள். இப்போது ஐ.பி. முகவரி பெறும் அனைத்து சாதனங்களையும் இலக்காக வைத்துள்ளனர். மொபைல் போன்கள் இன்டர்நெட் இணைப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால், மொபைல் போன்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட மொபைல் போன்கள், பன்னா ட்டளவில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மொபைல் போன்களைத் தாக்கும் வைரஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப் பின்னர் அதிலிருந்து நீங்கி விடுகின்றன. வந்ததும் போனதும் பயன்படுத்துபவருக்குத் தெரியாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு இயங்குவதாகத் தெரிகிறது. 

இந்த வைரஸ்களுக்கு அடித்தளம் பெரும்பாலும் டவுண்லோட் செய்யப் படும் புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள்ளன. அடுத்ததாக, மொபைல் போனுக்கான சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர்வரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட் மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனாலேயே அது வைரஸ் இல்லாதது என்று தெரிகிறது.

சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10 ஆயிரம் தனிப்பட்ட தளங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ளதாகக் கண்டறிந் துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடுதல் விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தளப் பக்கங்கள் அனைத்தும் நிலையான தகவல்களைத் தரும் பக்கங்களாக அமைக்கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள் சென்று இணைந்து தங்கள் கெடுதல் வேலையை மேற்கொள்வது எளிதாகிறது. 

இவற்றுடன் புளுஜாக்கிங் (Bluejacking) என்ற வகையில் தகவல் திருடும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம் மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை, அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது. 

இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வைரஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் மொத்தமாகத் திருடப் படுகின்றன. 

தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ரோமிங் மேற்கொள்கையில், மொபைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறியப் பட்டுள்ளது.

Zeus Trojan என்ற ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில் உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல் போன் பயன் படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் திறன் கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மொபைல் போன் திருடப்பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம் செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில் உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக்கவும் வழி தரப்படுகிறது.

சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ்களை இங்கு பார்க்கலாம்.

1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது. 

2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ். புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. 

3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும் அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம் அறிகிறது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டுமானாலும், தன் நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.

4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா போன்களில் பயன்படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ். செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது