தாய்ப்பாலிலுள்ள'ஹேம்லெட்' என்ற பொருள், 40வகையான புற்றுநோய்செல்களை அழிக்கும் திறன்பெற்றுள்ளது என,ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிகண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது, தற்செயலாககண்டுபிடிக்கப்பட்டது தான், 'ஹ்யூமன் ஆல்பாலாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!' இதன் சுருக்கம்தான், 'ஹேம்லெட்!'
மனித உடலில், 'ஹேம்லெட்' என்னபங்காற்றுகிறது என்பது இதுவரைகண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின்லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க்பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்தியஆய்வில், இந்த 'ஹேம்லெட்' மனித உடலிலுள்ள 40வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பதுகண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, சிறுநீர் பை புற்றுநோயால்பாதிக்கப்பட்ட சிலருக்கு, 'ஹேம்லெட்' கொடுக்கப்பட்டுசோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன்புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியதுகண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கானசிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்றுநிபுணர்கள் கருதுகின்றனர். 'ஹேம்லெட்' புற்றுநோய்செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களைபாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹேம்லெட்' எப்படி புற்றுநோய் செல்களைஅழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது.குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, 'ஹேம்லெட்' அங்கு, அமிலத் தன்மையைஉருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள்அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறுமனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனதுதாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனேஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியைமறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவவயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்தஅருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும்வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச்சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக்கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்றுகூறுகிறான்.
அல்குர்ஆன் 46:15
ஆனால், 46:15வது வசனத்தில் பாலூட்டும்காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்றுதிருக்குர்ஆன் கூறுகிறது.
அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன்கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை)கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒருகுழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக்காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்துமாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கிவைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்டகாலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.
கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்துமனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, "கர்ப்பகாலம் ஆறு மாதம்'' என்று குர்ஆன் கூறுகிறது என்றால்வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்தஇடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான்பொருத்தமானதாகும்.
இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்துவைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால்இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து,கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறைவார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும்அதிசயத்தைக் காண்கிறோம்.
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமானவடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்றுதனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில்விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர்கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான்.அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக்காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தைஎடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடுஎவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோஅது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ,கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.
கருவறையில் இந்த நிலையை அடைந்தஇறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது.இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூறமுடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப்பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும்இருக்காது.
இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம்உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன.அதன் பின்னர் தான் மனிதன் என்றுசொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும்உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும்,மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள்மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில்மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும்அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். (23:14)
பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம்ஆக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இந்தநிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும்ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடுமாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலைஉருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்றுஇறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய்ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் சொல்ல நினைப்பது