Pages

ஞாயிறு, 27 மார்ச், 2011

வளைகுடா அரபு நாடுகள் லெபனான் ஷியாக்களை வெளியேற்ற திட்டம்?


வளைகுடா நாடுகள் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான லெபனானிய ஷியா வகுப்பு முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானின் புரட்சி படை போன்ற இயக்கங்களுடன் லெபனானிய ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வளைகுடா நாடுகளிலிருந்து வெளியேற்ற அந்நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
குவைத் அரசு பஹ்ரைன் அரசுக்கு அதரவாக படை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், குவைத்தில் ஷியா பிரிவினர்கள் பஹ்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்கள். பஹ்ரைனில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 90 லெபனானிய ஷியாக்களை அந்நாட்டை விட்டு பஹ்ரைன் வெளியேற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- குவைத்திலிருந்து ஜைனுல் ஹுசைன்.
thanks for inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது